Thursday, August 18, 2011

எஞ்சியுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.


எஞ்சியுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கலை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி நன்பகல் 12 மணிவரையே வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யமுடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் அக்டோபர் 15ம் திகதி எஞ்சியுள்ள 23 உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தலகள் செயலகம் அறிவித்துள்ளது.

இதன்படி, 17 மாநகர சபைக்கும் 1 நகர சபைக்கும் 5 பிரதேச சபைக்குமான தேர்தல் ஒக்டோபர் 15ம் திகதி நடைபெறும் என தேர்தலகள்; செயலகம்; அறிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 25 திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களை அந்தந்த பிரதேசங்களின் மாவட்ட செயலங்களில் தாக்கல் செய்ய முடியும் என் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment