Sunday, September 4, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகள் அம்பலப்படுத்தப்படும் - மன்னிப்பு சபை எச்சரிக்கை


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகளை அம்பலப்பத்த சர்வதேச மன்னிப்புச்சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை இனங்காண்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதி அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை அம்பலப்படுத்தவுள்ளதாக எச்சரித்துள்ளது.

ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சர்ச்சை நிலவி வருவதாகவும் அந்த சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

கிறீஸ் மனிதர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்


யாழ். குடாவில் கிரீஸ் மனிதர்கள் தொடர்பில் பெரிஸாருக்கு தகவல் தருவதற்கு இரு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

0773588778 மற்றும் 021-3211257 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் பொதுமக்கள் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா அறிவித்துள்ளாhர்.

கிரீஸ் மனிதன் என்பது ஒரு வதந்தியே அதனை நம்பி கலகங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறீஸ் மனிதன் என்ற சர்ச்சை ஏற்பட்டதும் மக்கள் வீதியில் இறங்கி பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.


பிற்போடப்பட் முல்லைத்தீவு மாவட்ட இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலhல் சர்ச்சை



முல்லைத்தீவு மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு உள்ளுராட்சி சபைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவிருந்த இரு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்த 6 அரசாங்க ஊழியர்கள் மத்தியிலேயே புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

குறித்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்றுக்கொண்ட சம்பளமற்ற விடுமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த வேட்பாளர்கள் தமது தொழிலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்து பிரச்சினை தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக குறித்த வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தசிய கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது


நாட்டின் கல்வித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வித்துறை மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கென இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய கல்விக் கொள்கை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதுடன், 2012 ஆம் கல்வியாண்டு முதல் புதிய கொள்கையை அமுல்படுத்பத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டம், பரீட்சைகள், ஆசிரியர் கைநூல், பரீட்சை மதிப்பீடுகள், ஆசிரியர் இடமாற்றம், ஆசிரியர் நியமனம், போன்றவற்றில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதுடன்,

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள், தரம் ஒன்றிற்கான அனுமதி, புலமைப் பரிசில், உயர்தரம், ஆசிரியர் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் கல்வித்துறை தற்போது எதிர்நோக்கி வரும் சகல பிரச்சினைகளுக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஊடாக தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கல்வி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து கடந்த ஜனவரி மாதம் முதல் கல்வி மறுசீரமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு 24 தடவைகள் கூடி ஆய்வு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தரம் குறைந்த பெற்றோலுக்கான நஷ'டயீட்டினை இறக்குமதி செய்த நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க பெற்றோலிய வளத்துறை அமைச்சு தீர்மானம்


தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள நட்டத்தையும் இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து அறவிட திட்டமிட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் இதுவரையில் 41 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் தரம் குறைந்த பெற்றோல் சந்தைக்கு விநியோகம் செய்ய முடியாமல் தேங்கிக் கிடப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள நட்டத்தை தரம் குறைந்த பெற்றோலை இறக்குமதி செய்த சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து அறவிடவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கூட்டுத்தாபனத்தில் தேங்கியுள்ள தரம் குறைந்த பெற்றோலை சந்தைக்கு விநியோகம் செய்ய முடியாத காரணத்தினால் அதனை நெப்டா எரிபொருளாக மாற்றி, இலங்கை மின்சாரசபைக்கு வழங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை தரம் குறைந்த பெற்றோலை தாம்; வழங்கவில்லை எனவும் அதனால் ஏற்பட்ட நட்டத்தை பொறுப்பேற்க முடியாது எனவும் குறித்த சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்


நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவனை கற்றல் கற்பித்தல் நவடிக்கைகக்காக நாளை திறக்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ள தமிழ் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளுக்கு கடந்த 4 ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஜூலை 29 ஆம் திகதியும் இரண்டாம் தவனைக்காக விடுமுறை வழங்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் ஆரம்பமாகும் மூன்றாம் தவணை டிசம்பர் 9 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்காக மீண்டும் மூடப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, September 3, 2011

திருத்தப்ட்ட பின்னர் விடைத்தாள்கள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும் - கல்வி அமைச்சு


பல்கலைக் கழக மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதன் பின்னர் அவற்றை மாணவர்களிடம் கையளிக்க உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக உப வேந்தர்கள் குறித்த நடவடிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். 

விடைத்தாள்களை திருத்தும் போது, சில விரிவுரையாளர்கள் உரிய வகையில் திருத்தும் பணிகளை மேற்கொள்வதில்லை என மாணவர்கள் மேற்கொண்ட முறைபாட்டினை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காம சூரனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு


சிறுவர் துஷ்பிரோயகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவருக்கு பிணை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜா எல பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீதான முழுமையாக நிறைவு பெறாத பட்சத்தில் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க முடியாது என நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த நபருக்கு எதிராக கண்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிபுணர்க்குழு அறிக்கை ஏனைய அமைப்புகளின் பரிந்துரைகளுககு விடப்படவுள்ளது


நிபுணர்க்குழு அறிக்கையினை ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களிடம் சமர்ப்பிப்பது குறித்து அந்த சபை ஆலோசித்து  வருவதாக ஐ. நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். 

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு ஆலேசானை வழங்கும் நோக்கில் தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய குழு இந்த அறிக்கையை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை ஐ.நா செயலாளர் மட்டத்தில் மாத்திரம் தங்கி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினை அதன் கிளை நிறுவனங்கள் மற்றும் ஏனைய சபைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஐஇநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐ. நாவின் செயலாளர் நாயகம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையை பர்ஹான் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்.

பலஸ்தீன தனிஅரசுக் கோரிக்கைக்கு இலங்கை ஆதரவு


ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள பலஸ்தீனத்தினைத் தனிநாடாக அங்கீகரிப்பதற்கான பிரேரணைக்கு இலங்கை ஆதரவளிக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகளின்;, இம்மாதம் நடைபெறவுள்ள பொதுச் சபைக் கூட்டத்தில் பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பலஸ்தீனத்தை சுயாதீன நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பலஸ்தீன பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர். 

சுமர் 193 நாடுகளில் 124 நாடுகள் ஏற்கனவே தமது கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் இன்னும்; ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பே தேவைப்படுவதாகவும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ; அன்வர் அல் அகா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கடயைமாற்றிவரும் தமது நாட்டு தூதுவர்கள் ஆதரவு திரட்டும் முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போகம்புர சிறைக்கiதிகளுக்கு தொழிற்பயிற்சி


போகம்பரை சிறைக் கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைக் கைதிகளின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பொருட்டே நடவடிக்கையாக இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வேலைத் திட்டம் தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக நிறுவனப் பணிப்பாளர் மீதான தாக்குதல் சூத்திரதாரி சந்தேகத்தில் கைது


வீ.எப்.எம் வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் ருவான் சுகததாச மீதான தாக்குதலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாதிவெல பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் விசாரணைககளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

பொரலெஸ்கமுவவிலுள்ள தனது வீட்டுக்கு அலுவலகத்திலிருந்து சென்று கொண்டிருந்த போது வீ.எப்.எம் வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் ருவான் சுகததாச நேற்றிரவு 7.30 அளவில் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்துள்ள அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 30, 2011

அவசரகால சட்டம் நீக்கப்டப்மை பொலிஸ் அதிகாரத்தினைக் குறைத்து விடாது - பொலிஸ் மா அதிபர்


அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதனால் பொலிஸாரின் அதிகாரம் குறையபோவதில்லை என பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

சிவில் சட்டத்தை அமுல்படுத்தும் போது பொலிஸ் திணைக்களம் இதற்கு முன்னர் செயற்பட்டதைப் போன்றே தனது நடவடிக்கைகளை முன்னெடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்தல், ஓரிடத்தை சோதனையிடல், வாகனங்களை பரிசோதித்தல் போன்ற பொலிஸாரின்; சகல நடவடிக்கைகளும் வழக்கம் போல நடைபெறும் எனவும் இதற்கான ஏற்பாடுகள் பயங்கரவாத தடை சட்டத்தில் காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் பொலிஸ் திணைக்களத்தினால், பொலிஸ் பிரிவுகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றி வளைப்பு தேடுதல் போன்ற நடவடிக்கைகள் வழமைப்போல் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது எனவும் பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத் தீவு மாவடட இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் குறித்து இன்று முடிவெடுக்கப்படும்



முல்லைத்தீவு மாவட்டத்தின் எஞ்சியுள்ள இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் குறித்து இன்று தீhமானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் வடக்குக்கு வெளியில் தேர்தல் இடம்பெறாத பிரதேசங்களின் தேர்தலுடன் ஒரே தடவையில் நடத்துவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடி அகற்றப்படாமை மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெறாமை போன்ற காரணங்களினால்  குறித்த இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் திறப்'பு விழாவுக்கு அநுமதி மறுக்குமாறு பொலிஸார் கோரிக்கை


குருணாகலை – இப்பாகமுவ பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவுக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கொகரல்ல பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நேற்றைய தினம் குருணாகல் மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதனை ஆராய்ந்த மாவட்ட நீதிமன்றம் குறித்த மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழா நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள விடுதலை முன்னணி உறுப்பினர்களின் நிதியுதவியுடன் இந்த வீட்டுத் திட்டம் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் முதல்வர் கோரிக்கை


இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி தற்போது உயிருடன் இருந்திருந்தால் இதனையே செய்திருப்பார் எனக் குறிப்பிட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வின் கருணாநிதி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இதேவேளை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது மனிதாபிமான மற்ற செயல் என தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே இறந்து விட்டனர். 
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் இவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

எனவே கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்கள் மனுவை மறு பரிசீலித்து அவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எப்போதும் எதிர்க்கும் என்பதாக அக்கட்சியின் தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மிருக பலிக்கு எதிரான மனு நிராகரிப்பு


சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலபம் முன்னேஸ்வரம் கோயிலில் வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்த மிருக பலி பூஜைக்கு அனுமதிப் பத்திரம் வழங்காமல் இருக்க சிலாபம் நகரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிடுமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு 14 பௌத்த அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ஜாதிக ஹெல உருமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Monday, August 29, 2011

விஸா பெற வந்த மாதுவிடம் நால்வர் சல்லாபம்



வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டு செல்லவிருந்த பெண் ஒருவரைக் கடத்திச் சென்று கற்பழித்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விசா பெறுவதற்காக பிலியந்தலவில் தங்கியிருந்த போது குறித்த பெண்ணை நால்வர் கடத்திச் சென்று கற்பழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சிகிச்சைக்காக களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பயங்கரவாதத் தடை சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீள வலியுறுத்தல்.


தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வரும் எந்த சட்டத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டத்தினை நீக்கியுள்ள அரசாங்கம் அந்த சட்டத்திற்கு இணையான சட்டங்களை நீக்கவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நீக்குவதன் மூலமே இலங்கையில் சுமுகமான நிலை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதால் மாத்திரம் இலங்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு எழுத்து மூல ஒப்புதல் வழங்கினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையேல் பேச்சுகளை மீண்டும் தொடர்வதில் எவ்வித பயனும் கிடையாது எனவும் அவர் தெரிவித்து;ளளார்.

சர்வதேச அழுத்தஙகளுக்கு அடிபணியோம் - வெளிவிவகார அமைச்சின் செயலாளர்


சர்வதேச ரீதியில் இலங்கை மீது எழுந்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் வல்லமை அரசாங்த்திடம் காணப்படுவதாக வெளவிவிகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தீவிரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமையே சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கான காரணமாகும்.

நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்திய தீவிரவாதம் ஒழிக்கப்பட்டையே சர்வதேச நாடுகளின் பார்வையில் இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் அடியணியாது எனக் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர்,

மக்கள் சக்தியுடன் இத்தகைய குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ளும் வல்லமை அரசிடம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்;கத்தின் மீது போலிக் குற்றஞ்சாட்டுக்களை சுமத்தி விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு  ஆதரவளிப்பவர்கள் கள நிலவரத்தினை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளிவிவகார அமைச்சர்



கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

கச்சதீவு இலங்கையின் எல்லைக்குள் அமைந்திருப்பதால் இந்தியா அந்த தீவிற்கு உரிமை கோருவது அநாகரிகமான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கடல் எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் இலங்கை - இந்திய நாடுகளுக்கு  இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென காலத்திற்கு காலம் தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் வெளிவிவகார அமைச்சரின் கருத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

இதேவேளை, கச்சத்தீவில் வலைகளை உலர வைப்பதற்கும் புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக அமைச்சர் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த தீவை அண்டிய பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை - தமிழக முதல்வர்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின்; தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு கிடையாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள மூவரின் கருணை மனுக்கள் இந்திய ஜனாதிபதி பிரதீப்பா பட்டேலினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜனாதிபதியினால் நிராகரித்த பின்னர் அந்த தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டு;ளளார்.

எனினும் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியை அணுகுவதே சிறந்தது என  முதல்வர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

தலைபிறை பார்க்கும் மாநாடு நாளை


முஸ்லீம்களின் ரமழான் பெருநாளை தீர்மானிக்கும் ஹிஜ்ரி – 1432 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் கூட்டம் நாளை இடம்பெறவுளள்து.

தலைபிறையைத் தீர்மானிக்கும் இந்த கூட்டம கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

தலைபிறையினைக் காண்பவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011 5234044, 2432110, 2390783 , 0777 366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகிய இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், மஸ்ஜிதுகள் , தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Sunday, August 28, 2011

மோட்டார் சைக்கிள்களுக்கென விசேட பாதை ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.


தேசிய போக்குவரத்தில் மோட்டார் சைக்கிள் போக்குவரத்திற்கென விசேட பாதை ஒழுங்கு ஏற்படுத்தப்படவுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த சபையின் தலைவர் ரஞ்சித் பிரேமசிரி தெரிவித்துள்ளார்.

இதன்படி பாதனியவில் இருந்து அனுராதபுரம் வரையில் மோட்டார் போக்குவரத்திற்கென  விசேட ஒழுங்கு அமைக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலம் கனிசமான வீதி விபத்துக்களைக் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பிரேமசிரி மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் நெருக்கடியால் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆண்டுதோறும் இலங்கையினால் ஏற்றுமதி செய்யப்படும் 300 மில்லியன் கிலோ தேயிலையில், 78 வீதமானவற்றை மத்திய கிழக்கு நாடுகளே இறக்குமதி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் இருந்து 55 மில்லியின் கிலோ தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

இது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 30 வீதம் மட்டும் ஆகும். 

அரசியல் நெருக்கடிகளால் லிபியா, சிரியா போன்ற நாடுகளின் பிரதான துறைமுகங்களுக்கு தேயிலையை அனுப்ப முடியாத நிலை உள்ளதாக இலங்;கையின் முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான மலிக் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையும் தேயிலை ஏற்றுமதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்; கூறியுள்ளார்.  

இதேவேளை, இலங்கையின்  நான்காவது மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் ஆண்டுதோறும் 10 மில்லியன் கிலோ தேயிலை இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்யும் லிபியாவின் சந்தை  பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலையினால் பெறப்படும் அந்நிய செலாவனி குறைந்துள்ளதா இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் ஹசித டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசின் அடாவடித்தனங்களை மக்களுக்கு எடுத்து;ந செல்ல மக்கள் pடுதலை முன்னணி தீர்மானம்


இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்த மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டு மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறைகள் தொடர்பிலும் சர்வதேச மட்டத்தில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவூட்டுவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்காக அடுத்த மாதம் முதல் நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக அக்கட்சியின் விழிப்புணர்வூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்துஇரு வாரங்களுக்கு இந்த மக்கள் விழிப்பூட்டல் நடவடிக்கை அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாசார ரீதியில் அரசாங்கம் மக்களை நசுக்கி வருவது தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் மீது தாக்குதல் Nமுற்கொள்பவர்களை இனங்காண விமானப் படையினர் சேவை பெறப்பட்டுள்ளது


நாட்டில் அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கி வரும் கிறீஸ் மனித வன்முறைகளில் ஈடுபடுபவர்களை இனங்காண விமானப் படையினரின் சேவை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விமானப் படையினர் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேறகொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறீஸ் மனிதர்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் பொதுமக்களை விமானப் படையினர் கைது செய்வதற்கு இந்த ஏற்பாடு உதவும் என நம்பப்படுகின்றது.

டெங்கினால் 121 பேர் இவ்வாண்டில் பலி


நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் நூற்று இருபத்தியொரு பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் 16 ஆயிரத்து 500 ற்கும் அதிகமான டெங்கு நோயாளிகள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 58 மரண சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

குறித்த மாவட்டத்தில் இருந்து 6 ஆயிரத்து 563 பேர் டெங்கு நோயாளிகளாக இனங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் அதிகூடிய டெங்கு தாக்கம் நிலவுகின்ற மாவட்டமாக கொழும்பு திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கடற்படை முகாம்கள்


வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாடு முழுவதும் கடற்படை முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி  வைஸ் அட்மிரல் டீ. டபிள்யு. ஏ. எஸ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

நாட்டில்; தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காதவாறு பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டே நாடு முழுவதும் கடற்படை முகாம்கள் அமைக்கபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடல் மார்க்கமாக மெற்கொள்ளப்படும் சட்ட விரோத ஆட்கடத்தல் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதனைத் தடுக்க இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக முல்லைத்தீவு, முள்ளிக்குளம் மற்றும் பாணமை ஆகிய பிரதேசங்களில் கடற்படை முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி  வைஸ் அட்மிரல் டீ. டபிள்யு. ஏ. எஸ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் மீதான இராணுவத் தாக்குதலுக்கு எதிராக வழக்கு


நாவாற்துறையில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுNருஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நாவற்துறை மக்களை; நேரடியாகச் சென்று சந்தித்து பேசியுள்ளதாகவும் அவர்;களின் சம்மதத்துடனே உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவினைத் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை தீவிரவாதிகள் என்று இராணுவத் தளபதி விபரித்து இருக்கும் போது இராணுவத்தினரே இந்த தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சந்தேக நபர்களுக்குப் இராணுவம் பாதுகாப்பு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் இராணுவம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனை விடுத்து அப்பாவி மக்கள் மீது இராணுவம் தாக்குதல் மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களது காணிகளை இந்தியா பாதுகாத்து தர வேண்டும் - ததேகூ கோரிக்கை


தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் கலந்துரையாடல்களின் போது இந்திய அரசிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக அக்கட்சியின நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தும் பொருட்டு இந்த சந்திப்பிற்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. 

இலங்கையின் 8 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். 

இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி மக்களை அவர்களது சொந்தக் காணியில் குடியமர்த்துவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என  தாம் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இராணுவத் தலையீடு நிறுத்தப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் நிலப் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுதல் மற்றும் யுத்த காலத்திலும் அதற்கு முன்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல் என்பன பற்றியும் இந்தியாவிற்கு அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள 2 லட்சம் இலங்கை தமிழ் மக்களை நாட்டிற்கு மீள திரும்புவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்துள்ளார்.


புதிய சட்டமா அதிபராக சொலிஸ்டர் ஜெனரல் ஈவா வணசுந்தர நியமிக்கப்படும் சாத்தியம்.


இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சொலிஸ்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஈவா வணசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.

சட்டமா அதிபரர் மொஹான் பீரிஸ் எதிர்வரும் 31 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது வெற்றிடத்திற்கே சொலிஸ்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியான ஈவா வணசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் வகிக்கும் சொலிஸ்டர் ஜெனரல் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியான பாலத பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தற்போதைய சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அமைச்சரவையின் சிரேஷ்ட சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளரின்; இலங்கை விஜயம் ஒத்திவைப்பு


ஆசிய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளியே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணமாக கருதப்படுகின்றது.

ஆசிய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் நாளை இலங்கை வரவிருந்தது குறிபிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஐரின் சூறாவளியால் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களது தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 24 மணி நேர அவசர தொலைபேசி சேவையொன்றினையும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம  அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த அவசர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

00 12 023 520 355       என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, இலங்கையில் உள்ளவர்கள், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவராலயத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

இதன் மூலம் அமெரிகாவில் உள்ள தமது உறவினர்கள் குறித்த  தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுரகம் அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூறாவளியானது, அமெரிக்காவின் கிழக்கு கரையோர பிரதேசத்தின் ஊடாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக அந்நாட்டு வானிலை நிலையம்; தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த சூறாவளி காரணமாக மேலும் ஆறு பிராந்தியங்கள் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கிருந்தும், மக்களை வெளியேற் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து;ளளது.

ஆன்மீக உற்சவத்தில் 40 லட்டசம் பெறுமதியான நகைகள் கொள்ளை


நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தில் 20 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் ஆயல வீதியில் கந்தனின் தேர் பவனி வந்தபோது சன நெரிசலைப் பயன்படுத்தி 20 லட்சம் ரூபா பெறுமதியான 40 பவுண் நகைகள்; திருடப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு இரு பெண்களையும் சில இளைஞர்களையும் யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில்  பத்து முறைப்பாடுகள் யாழ் பொலிஸிலாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து;

இவற்றுள் அநேகமான திருட்டு சம்பவங்கள் கால் கழுவும் பகுதிகளிலும் ஆலய உள் வீதியிலுமே இடம்பெற்றிருப்பதாகத் விசாரணைகளில் இருந்து தெரிவிய வந்துள்ளது.


திருட்டுக்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட் பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, August 27, 2011

நாளொன்றுக்கு 700 கருக்கலைப்புக்கள் இலங்கையில்


இலங்கையில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 பாதுகாப்பற்ற கருக்கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சமூக சேவைகள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த கருக்கலைப்புக்கள் சட்டவிரோதமான முறையில் இரகசியமாக் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கருக்கலைப்புச் சம்பவங்களினால், பலர் கருப்பை புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை தொடருமானால் நாட்டில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாற்றமடையக் கூடிய அபாயம் உள்ளதாக சமூக சேவைகள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையக பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு


மலையகத்திலுள்ள பட்டதாரிகளுக்கு அரச துறைகளில் தொழில் வாய்ப்பினை பெற்றுகொடுப்பதற்கான நேர்முகப்பரீட்சை கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு நடாத்தவுள்ளது.

இந்த நேசர்முகப்பரீட்சை கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் தலைமையகத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக புதிய தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மலையகத்திலுள்ள பட்டதாரிகளை தங்களை அமைச்சில் பதிவு செய்துகொள்வதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி நன்பகல் 12 மணிக்கு நேர்முகப்பரீட்சைக்காக சமூகமளிக்குமாறு கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.



இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் இனவாதம் அகல வேண்டும்


இலங்கையில் சிங்கள இனவாதம் தலைதூக்கியுள்ளதாலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாதமே இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் சமாதான செயற்பாடுகளை முன்னெடுப்பது கடினமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய இனவாதமற்ற அரசியல்வாதிகளும் அரசாங்கத்தில் உள்ளனர்.

எனினும் அவர்களால் இனவாதமற்ற அரசியலுக்கு திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு அரசாஙகத்தின் செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்;நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தவறு காண்பது பொருத்தமற்ற விடயம் எனவும் இலங்கையின் இனப்பிரச்சினைக்காக தீர்வினைக் காண்பதற்கு சிங்கள இனவாதமே தடையாக உள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்;.

நெடுந்தீவில் மனித எச்சங்கள் மீட்பு


நெடுந்தீவு உதவி அரச அதிபர் காரியாலயத்திற்கு அருகில் ஒரு தொகுதி மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மண்டை ஓடுகள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தொவிக்கப்பட்டுள்ளது.

உதவி அரச அதிபர் காரியாலயத்திற்கு அருகில் அத்திபாரம் போடுவதற்காக நிலத்தினைத் தோண்டிய போதே இந்த 8 மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த நிலத்தில் இருந்து மனித எலும்புக்கூட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அத்திபாரம் வெட்டும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.



அவசரகால சட்டம் நடைமுறை இழந்துள்ளதால் 6 ஆயிரம் பேரை விடுவிக்கலாம்


அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையில்; கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் பேரை விடுதலை செய்ய முடியும் என தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் கூட்டம் கூட்டுபவர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டுபவர்கள் எதி;ர்காலத்தில் கைது செய்யப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பயங்கரவாதத் தடை சட்டம் நீதித்துறையின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் இலங்கை வரவுள்ளார்


இந்தியாவின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷமா சுவராஜ் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பினை ஏற்று இலங்கை வரவுள்ள இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் 5 நாள் தங்கியிருக்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு இந்திய நாடாளுமன்றக்குழு ஒன்று விஜயம் செய்யவுள்ளதாகவும்,

இந்த நாடாளுமன்றக் குழு தமிழக உறுப்பினர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக அமையாது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடாளுமன்றக் குழு இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளை சந்திக்கவுள்ளதாகவும் வட பகுதிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான பணிகளுக்கு இந்தியா முன்னுரிமை வழங்கி செயற்படவுள்ளதாகம் அதற்காக இலங்கையின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு இந்த  நாடாளுமன்ற குழுவின் விஜயம் அமையும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையால் இலங்கையின் அபிவிருத்தி இலகுவாக முன்னெடுக்கப்பட வாய்ப்பு அமெரிக்கா புகழாரம


இலங்கையின் அபிவிருத்திப் பணிகள் இலகுவாக முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை உதவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்காவின் அரச பேச்சாளர் Victoria Nuland  கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றொபெட் ஓ பிளேக்கும் அமெரிக்காவின் இந்த கோரிக்கையினை வலியுறுத்துவார் எனவும் அவர் குறிபபிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிர்வரும் வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள இவர் அரச தரப்பினர், கட்சித் தலைவர்கள், மனித உரிமைகள் குழுக்கள், சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், மற்றும் பல்கலைக்கழக மாணவர்களையும் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அரச பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதற்திரமானதும் நீதியானதுமான விசாரணைகள மேற்கொள்ளப்படும் வரை அமெரிக்க தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என அமெரிக்காவின் அரச பேச்சாளர் Victoria Nuland குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையின் பின்னர் முதலாவதாக வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கு வருவது இவரது விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.



கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட 5 வேட்பு மனுக்கள' நிராகரிப்பு


கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள உள்ளூராடசி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்து;ளளது.

எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி மாநகர சபைக்காக ஒரு அரசியல் கட்சி மற்றும் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பு மனுக்களும்>

Gangawatakoralaya பிரதேச சபைக்காக ஒரு அரசியல் கட்யின்; வேட்பு மனுவும்> குண்டசாலை பிரதேச சபைக்காக ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பு மனுவும்> மாத்தளை மாநகர சபைக்காக ஒரு சயேட்சைக் குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.


உலகின் புதுமை படைக்கும் ஆசிரியர்களின் பட்டியலில் எம்மவர்


உலகின் புதுமை படைக்கும் ஆசிரியர்களின் பட்டியலில் முதல் 50 பேர்களுள் இலங்கையர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இந்த கணிப்பீட்டில் இலங்கையைச் சேர்ந்த மொகிடீன் பாவா ஹஸீன் என்ற ஆசிரியரே இவ்வாறு  இடம்பிடித்துள்ளார். 

சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் உலகின் புதுமை படைக்கும் ஆசிரியர் போட்டியில் உலகின் 114 நாடுகளில் இருந்து 500 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதல் 50 பேர்களுள் ஒருவராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மொகிடீன் பாவா ஹஸீன் இலங்கையின் கிழக்கு மாகாணத்;தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

அத்துடன் சம்மாந்துறை மத்திய கல்லூரியின் கணணி கற்கை நிலையத்தின் பொறுப்பாசிரியராகவும் கிழக்கு மாகாணத்தின் இலத்திரனியல் கிராம செயற்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Friday, August 26, 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்ப முயன்றதாக மின் சக்தி அமைச்சர் தெரிவிப்பு.



தமிழீழ விடுதலைப்புலிகளின்  தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கிய  உறுப்பினர்கள்  இறுதிக் கட்ட போரின் போது ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு செய்தது போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் கொலை செய்ய சில சக்திகள் முயற்சிப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

1970 மற்றும் 80களில் காணப்பட்ட நிலைமைகளை வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியாகவே மர்ம மனிதர்கள் போன்ற நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆசியாவின் அபிவிருத்திற்கு வறுமையே தடை


தென் ஆசியப் பிராந்தியத்திலிருந்து வறுமையினை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என பங்களாதேச பிரதமர் மற்றும்  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

பங்களாதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பங்களாதேச பிரதமர் ஷேக் ஹஸினா ஆகியோர் இந்த கருத்தினை வலியுறுத்தியுள்ளனர்.

தென் ஆசியாவில் நிலவும் வறுமை மற்றும் பஞ்சமே பிராந்திய நாடுகளின் அபிவிருத்திற்கு தடையாக உள்ளதாக பங்களாதேச பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவ பிரதேசசபைத் தவிசாளாழன் பதவி பறிமுதல்


மகாவ பிரதேச சபைத் தவிசாளர் பதவியிலிருந்து பந்துல புஷ்பகுமார தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மகாவ பிரதேச சபை உறுப்பினர்களால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து வட மேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க வினால் இவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது கடமைகளை  மகாவ பிரதேச சபையின் பிரதித் தவிசாளரான றோகன வசந்த குமார மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசரகால சட்ட நீக்கம் இலங்கையின் நன்மதிப்பினை சர்வசே ரீதியில் கட்டியெழுப்புவதற்காக தருணம்


இலங்கை மீது சர்வதேச ரீதியில் எழுந்துள்ள அழுத்தங்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அவசாரகால சட்டம் நீக்கப்பட்டமை மகிழ்ச்சியளித்தாலும் அதனை நடைமுறை ரீதியில் சாத்தியப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை மக்களுக்கு அனுபவிக்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போதே நாட்டில் சுதந்திரம் சட்டவாட்சி மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்து;ளளார்.

சர்வதேச ரீதியில் இலங்கை மீது எழுந்துள்ள அபகீர்த்தியினை நீக்குவதற்கு கிடைக்கப்பெற்ற சிறந்த சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்,

இதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பில் நன்மதிப்பினை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம்


வடக்கு மாகாணசபைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தலை நடாத்த அரசாங்ம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

போருக்குப் பின்னரான சூழ்நிலையில் குறுகிய காலத்துக்குள் சில விடயங்களை பூர்த்தி செய்யுமாறு அரசாங்கத்தை சர்வதேச நாடுகள் கோரிவருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு குருகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாடுகள் கோருவது நியாயமற்றது என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 

சர்வதேச வரலாறுகளை நோக்கும் போது உள்நாட்டு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் குருகிய காலத்தினுள் முன்னேற்றம் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன், கம்போடியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட குருகிய காலத்தினுள் முன்னேற்றம் காணவில்லை எனவும் வேறு சில நாடுகளில் இதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் வரை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்படும்



அரசாங்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் அதேகாலத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளும் இடம் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு மாற்றீடாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போதே இந்த கருத்துக்களை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த  உதவும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்;கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆறு வருடங்களில் 24 ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது


24 ஊடக நிறுவனங்களுக்கு கடந்த 6 வருடங்களில் ஊடக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவற்றுள் 14 வானொலி நிறுவனங்களும் 12 தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிலையான தொலைபேசிச் சேவை ஒன்றிற்கும் இரண்டு கையடக்க தொலைபேசி நிறுவனங்களுக்கும் இரண்டு இணைய சேவை நிறுனங்களுக்கும் 3 செய்மதித் தொலைக்காட்சி சேவைகளுக்கும் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஊடக நிறுவனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவது ஊடக அமைச்சின் அதிகாரத்துக்குட்பட்ட ஒரு விடயம் எனவும் அவற்றுக்கான அலை வரிசையினை வழங்குவது தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோத 8 வானொலிகள் முற்றுகை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 சட்டவிரோத வானொலி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றுள் கிழக்கு மாகாணத்தில் இருந்து நான்கு வானொலி நிலையங்களும் வட மேல் மாகாணத்தில் இருந்து 3 வானொலி நிலையங்களும் ஏனைய பகுதியில் இருந்து ஒரு வானொலி நிலையமும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானொலி நிலையங்களுக்கான ஒலி பரப்புக் கருவிகள் கிடைக்கப்பட்ட விதம் குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வானொலி நிலையம் ஒன்றின் ஒலி பரப்புக் கருவி அரச வானொலி நிறுவனத்திற்கு சொந்தமானது என விசாரணகைளில் இருந்து தெரிய வந்து;ளது.

யானைகளின் எண்ணிக்கை கணிணி மயப்படுத்தப்படவுளள்து

இலங்கையில் உள்ள யானைகளின் எண்ணிக்கை எதிhவரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் யானைகளின் எண்ணிக்கையினை மதிப்பிடும்  நடவடிக்கை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கபக்பட்டது

தற்போது யானைகளின் விபரங்களைத் தரவு படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் டிஜிடல் மற்றும் கணணி விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பெறப்பட்டுள்ள யானைகளின் விபரங்கள் தற்போது கணணி மயப்படுத்தப்பட்டு வருகின்றன.

யானைகளின் வயது, நிறை, பால் மற்றும் உடலியல் கூறுகளின் அடிப்படையில் இந்த தரவேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.டி ரத்நாயக்க மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவுத் தலைவர் பேராசிரியர் பராக்கிரம கருணாரத்ன ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த கணணி மயப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இரு தடுப்பு_சிகளுக்கு தற்காலிக தடை



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள இரண்டு உயிர் கொல்லி நோய்தடுப்பூசிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இந்த மருந்தினை உட்செலுத்தியதால் உயிரிழ்துள்ளதார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றுமொரு நோயாளிக்கு மேலும் நோய் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டதுள்ளது.

இதனை அடுத்தே குறித்த இரு நோய்த்தடுப்பூசிகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


"Cefuroxime" 750 mg (பதிவிலக்கம்Ep 735) மற்றும் "Amoxacyllin Clavunic" Acid 1.25 g  (பதிவிலக்கம் 2263444 மற்றும் 2278449)  ஆகிய தடுப்பூசிகளுக்கே இந்த தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நோய்த்தடுப்பூசிகளின் மாதிரிகள் மருத்துவ ஆய்வுக்காக தேசிய மருந்து தர உத்தரவாத பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இரு மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தும் ஏனைய வைத்தியசாலைகளில் இந்த மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்கத் தலைவர் சமன் ரட்னப்பிரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் தராதரங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐந்து லட்சம் காணிகள் வெளிநாடுகளுக்கு குத்தகை;காக விடப்படவுள்ளது

இலங்கை எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் ஆயிரத்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்துக் கொள்வதை இலக்காக கொண்டுள்ளது.

இதற்காக ஐந்து இலட்சம் ஏக்கர் காணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கவுள்ளதாக பொருளியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த காணிகளில் தொல்லியல் பெறுமானம் கொண்ட 18 இடங்களும், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய  30 இடங்களும், வன விலங்கு சரணாலயங்கள், காடுகள், ஈர வலயங்கள், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளடங்களாக  124 இடங்களும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோக்கததிற்காக கரையோரங்களை அண்டிய இரண்டு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பும்,

விவசாயச் செயற்பாடுகள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் பொழுதுபோக்கு மையங்களை நிறுவுவதற்காக மூன்று இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பும்; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் காலிமுகத்திடல் பிரதேசம் உள்ளடங்கலாக 20 ஏக்கர் நிலப் பிரதேசத்தை சங்கிறீலா மற்றும் கதிக் சுவிக் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அரசு கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மாத்தறை, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, காலி போன்ற மாவட்டங்களில் உல்லாசப் பயணத்துறையுடன் தொடர்புடைய பிரதேசங்களை அண்டியுள்ள காணிகளையும் கையளிப்பதற்கும் அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியிலும், சுற்றாடல் ரீதியிலும் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறும் பெறுமதி மிக்க இலக்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏலமிடுவதானது நாட்டின் எதிர்கால நலனுக்கு பாரதூரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

யாழ் உயர்பாதுகாப்பு வலயங்களில் 36 ஆயிரம் குடும்பங்கள் மீளக் குடியமர்;த்தப்பட்டுள்ளனர்


யாழ் மாவட்டத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களில் 36 ஆயிரம் குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளதாக யாழ். அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்து;ளளார்.

முன்னாள் உயர் பாதுகாப்பு வலயங்களில் 35 ஆயிரத்து 968 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 199 பேர் இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுள் 11 ஆயிரத்து 879 குடும்பங்கள் தௌ;ளிப்பழை பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் எனவும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

Wednesday, August 24, 2011

ஐ.நா அமைதிப் படையில் எம்மவர்கள்


ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணிக்காக இலங்கையிலிருந்து 13 ஆயிரத்து 992 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐ.நா வின் பொலிஸ் மற்றும் ஆயுத படை தரப்பினர் தொடர்பில்; ரவிகருணாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணி;க்காக இலங்கையிலிருந்து 12 ஆயிரத்து 210 இராணுவத்தினர்கள் 600 கடற்படையினர் 610 விமானப்படையினர் சென்றுள்ளனர்.

இவ்வாறு ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணியில் இணைந்துள்ள எமது நாட் இராணுவத்தினருக்கு 1028 அnமிக்க டொலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதேவேளை மேலதிக கொடுப்பனவாக 73 அமெரிக்க டொலர்களும் ஐ.நாவினால் வழங்கப்படுகிறது.

அத்துடன் பொலிஸாருக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 120 முதல் 150 அமெரிக்க டொலர்கள் சம்பளமான வழங்கப்படுகின்றன.

இவர்கள் லெபனான் சூடான் எதியோப்பியா கொங்கோ மொறேகோ, ஹெய்ட்டி, கிழக்கு தீமோர், உள்ளிட்ட நாடுகளில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு இலங்கை ஆதரவா?


தென்சூடானின் சுதந்திர விழாவிற்கு இலங்கையின் பிரதிநிதியாக விஜயம் செய்த சிரேஷ்ட்ட அமைச்சர் பேராசியரியர் திஸ்ஸ விதாரன நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அமர்ந்திருந்தார் என்பது வெறும் கட்டுக்கதை என ஆளும் கட்சியின் பிரதம கொறதினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரன அமர்ந்திருந்தார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண நாடு கடந்த தமழீழ அரசாங்க பிரதி நிதிகளுடன் அமைர்ந்திருக்க வில்லை எனவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தெரிவித்தார்.

ஈழத்துக்கு தேர்தல்கள் ஆணையாளர் ஆதரவு


ஈழம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை தேர்தல்கள் செலகம் ரத்துச் செய்யவுள்ளதாக வெளியான செய்தி  உண்மைக்குப் புறம்பானது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களில் ‘ஈழம்’ என்ற சொல்லை உள்ளடக்கியதான கட்சிகள் தடைசெய்யப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழம் என்ற சொல்லானது இலங்கை என்ற சொல்லின் இன்னொரு பொருள் என்பதனால் அதனைத் தடை செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிப்பட்ட சில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களில் போட்டியிடாமை மற்றும்  தங்களது கட்சிகள் தொடர்பான தகவல்களை வழங்காமை போன்ற காரணங்களாலே  அவற்றை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இது தேர்தல் திணைக்கள சட்ட விதிகளுடன் தொடர்புடைய விடயம் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


சிறுமியன் ஆபரணம் கொள்ளையிடப்பட்டது


பதுளை பிரதான பஸ்நிரையத்தில் வைத்து 5  வயது சிறுமி ஒருவரின் தங்க ஆபரணம் ஒன்றை கொள்ளையிட்டுச் சென்ற இருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுந்தேக நபர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரதான பஸ்நிலையத்தில் பஸ்ஸிற்காக தனது தாயுடன் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவரின் தங்க ஆபரணம் ஒன்றை கொள்ளையிட்டுச் சென்ற இருவரும் அருகில் உள்ள அடகுக்கடையில் ஒன்றில் ஆபரணத்தை அடகு வைக்க முற்பட்டபோதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வருகின்றனர்.


தமிழ் மக்களின் மனதை அரசு வெல்லவில்லை - இந்தியா குற்றச்சாட்டு


தமிழ் மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தை அரசாங்கம் வெற்றி கொண்டுள்ள போதிலும் தமிழ் மக்களின் இதயங்களை சென்றெடுக்க தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் தொடர்பில் ஆலாசனைகள் கூறப்படுவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயார் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ் மக்களின் மன நிலையை நன்க அறிந்தவர்கள் என்ற ரீதியில் தாம் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் இதயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மாத்திரமே நிரந்தர தீர்வுத்திட்டம் ஒன்றை இலங்கையில் கொண்டு வரமுடியும் எனவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.


கல்வியமைச்சிலும் ஊழலா? ஐ.தே. கட்சி கேள்வி



ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தின் போது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தொடர்ந்து வழங்க முடியாத அரசாங்கம் ஆயிரம் பாடசாலைகளை எவ்வாறு அபிவிருத்தி செய்ய போகின்றது என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ஐந்தாம் தர மாணவர்களுக்கு வருடத்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற புலமை பரிசில் பரீட்சையானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வௌ;வேறு நேரங்களில் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் புலமை பரிசில் பரீட்சையை நடத்தமுடியாத அரசாங்கத்திற்கு கல்வி அமைச்சர் மற்றும் பரீட்சை ஆணையாளர் தேவையா எனவும் அரசாங்கத்திடம் கேட்க கடமைபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொது தராதர  உயர் தரபரீட்சையானது உயர்தர பாட விதானத்தில் உள்ளடக்கப்படாத சில விடயங்களும் வினாக்களாக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாககும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இதுவாகும் எனவும் அவர் குற்றம்சுமத்தினார்.

அத்துடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் போது நூற்றக்கு 75 வீதமான அதிபர்கள் பணம் பெற்றுக்கொண்டதன் பின்னரே அனுமதியினை வழங்குகின்றனர்.

இவ்வாறு பணம் பெற்றுக்கொள்ளும் அதிபர்கள் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களாகவே காணப்படுகின்றனர்.

குறித்த அதிபர் பதவியில் உள்ளவர்கள் மீது எந்த விதாமன சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத நிலை நாட்டில் காணப்படுகின்றது.

இதற்கமைய குறித்த அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஆளும் அரசாங்க தரப்பிலுள்ள அமைச்சர்களின் சிபாரிசுகளினால் குற்றத்திலிருந்து தப்பித்து கொள்கின்றனர்.

எது நாட்டில் காணப்படுகின்ற கல்வி முறையினை முறையாக முன்னெடுக்கும் பட்சத்தில் கல்வி துறையில் பாரிய வளர்ச்சியினை எமது பெற்றுக்கொள்ளும்.

ஆனால் எமது நாட்டிலுள்ள ஊழல் மோசடிகளால் கல்வி துறையும் பாதிப்படைந்து வருவதை எதிர்கட்சி சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பகல் நேர உணவு போன்றவற்றை ஐக்கிய தேசிய கட்சி அறிமுகம் செய்து வைத்தது.

ஆனால் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளதா என நோக்கும் போது சில பாடசாலைகளுக்கு இதுவரையில் இலவச சீருடை கிடைக்கவில்லை.

பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவுவும் அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அரசாங்கம் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யபோவதாக அறிவித்துள்ளமை எந்தவகையில் சாத்தியமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Monday, August 22, 2011

பஸ்களில் யாசகம் பெறுவது முற்றாக தடுக்கப்படவில்லையே


பஸ்களில் யாசகம் பெறுபவர்களுக்கெதிராக உருவாக்கப்ட்ட சட்டமூலம் பெயரளவிலேயே காணப்படுவதாக தனியார்  பஸ் உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாசகர்களால் பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சில யாசகர்கள் பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்களை அச்;சுறுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய பஸ்களில் யாசகம் எடுப்பதை தடை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலமான வேண்டுகோளினை முன்வைத்துள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள

அடிப்படை வசதிகள் இன்றி பூந்தோட்ட மக்கள்


வவுனியா பூந்தோட்டம் முகாம்மில் தங்க வைக்கப்பட்டிருந்த 187 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக முகாமில் தங்கியுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து கடந்த 16 வருடங்களாக வவுனியா பூந்தோட்டம் 187 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 200 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றை அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக துண்டித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பூந்தோட்ட முகாமில் தங்கியுள்ளவர்களை கிளிநொச்சியில் மீள்குடியேற்ற தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ள போதிலும் அவர்கள் மீள்குடியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் வவுனியாவில், காணிகளும் வீடுகளும் வழங்கப்பட வேண்டும் என அந்த மக்கள் கோரி வருவதாகவும் இது நியாயமற்ற கோரிக்கை எனவும் பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு காரணமாக தாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



புத்தளத்தில் இராணுவம் பாதுகாப்பு கடமையில்


புத்தளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

புத்தளத்தில் மர்ம மனிதர் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற பதற்ற நிலையினை அடுத்து பொலிஸாருக்கு பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஐவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து புத்தளத்தில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தனர்.

இதேவேளை மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த பெண்ணொருவரும் 13 வயது சிறுவன் ஒருவரும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




மீன்பிடிக்க பாஸ நடைமுறை மீள அமுலில்


வடபகுதியில் மீன்பிடிப்பதற்கு தளர்த்தப்பட்டிருந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கi இந்திய மீனர்வகளுக்கிடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் போதல்கள் காரணமாகவே இந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மீனவர்களிடம் புகைப்படங்கள், தேசிய அடையாள அட்டை பிரதி மற்றும் பொலிஸ் பதிவு ஆகியன சேகரிக்கப்பட்டு வருவதாகம் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து மீனவர்கள் பெரம் அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு மீன் பிடி தொழிலுக்கு செல்ல தாமதம் காட்டி வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடித் தொழிலுக்குத் தடைவிதிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் மன்னார் கடற்பிராந்தியத்தில்; மீன்பிடியைத் தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாட்டில் எண்ணெய்ப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் கடற்படையினரின் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்தும்படி கோரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகக் கப்பல் துறைப் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன்; கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் மீன்பிடித் தடை விதிக்கப்பட்டால் வறுமைக்கோட்டின் வாழ்பவர்களே தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என கடல்துறை மற்றும் கடல்தொழில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.



மக்களது தாக்குதலைக் கட்டுப்படுத்த இராணுவத்திற்கு பயிற்சி


கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் அவரச நிலைமைகளைச் சமாளிப்பதற்காக இராணுவத்தினருக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் மோதல்களை அடுத்து இந்த விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திடீரென நடத்தப்படும் கல்லெறித் தாக்குதலில் இருந்து தப்பிப்பது, ஆத்திரமுற்ற மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியன தொடர்பில் இராணுவத்துக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சிகள் நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டபோதும் இராணுவத்தினருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் ஊடகப்பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கலவரத்தில் ஈடுபடுபவர்களுகள் மீது தாக்குதல் மேற்கொள்ள இராணுவத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிண்ணியாவில் கடற்படையினர் முகாமை கடந்த வாரம் பொதுமக்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு இராணுவத்தின் புதிய பிரிவு ஒன்று தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



பாலியல் ஊக்க மருந்திற்கு மாணவர்கள் மத்தியில் கிராக்கி



நாட்டில் பாலியல் ஊக்கமருந்து பாவனையாளர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் சாந்த ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்திலேயே அதன் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொட, கொட்டாவ மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளிலேயே இந்த மருந்து வகைகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாலியல் குறைபாடுகள் இல்வாதவர்களும் பாலியல் ஊக்க மருந்து வகைகளை அதிகம் பயன்படுத்தி வருவதாக வைத்திய அதிகாரி சாந்த ஹெட்டிஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்களின் ஆலோசனையின்றி ஊக்கமருந்துகளை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐஸ்லாந்தின் அரசியல் அமைப்புக்கு பேஸ்புக் பங்களிப்பு


ஐஸ்லாந்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு மக்களின் கருத்துக்களுக்கமைவாக உருவாக்கப்பட்டதென அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தின் அரசியல் யாப்பில் உள்ள அனைத்து சரத்துக்களும் சமூக இணையத்தளங்களான முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றின் ஊடாக விவாதிக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அரசியல் யாப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மக்களின் அபிப்பிராய கணக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

1944 ஆம் ஆண்டு டென்மார்க்கிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஐஸ்லாந்து அதன் அரசியல் யாப்பில் சிறிய மாற்றங்களை மாத்திரமே மேற்கொண்டுள்ளதோடு இதுவரையில் அதனையே பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அதன் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கிணங்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு 950 பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கு தொலைக்காட்சி, வானொலி, விக்கிபீடியா, முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலிருந்து பங்களிப்பு பெறப்பட்டதாக ஜஸ்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மக்கள் கருத்திற்கு விடப்பட்டவுள்ள யாப்பானது மக்களின் அங்கிகாரத்துடன் அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சத்து 20 ஆயிரம் மொத்த சனத்தொகையை கொண்ட ஐஸ்லாந்தில் 80 சதவீதமானோர் இணையத்தள பாவனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Sunday, August 21, 2011

இலங்கையின் எண்ணெய் வளத்தினை சூரையாட நோர்வே முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு.


இலங்கையின் எண்ணெய் வளத்தில் பங்கு கேட்பதற்கு நோர்வே முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்திளை சூரையாடி வருகின்ற நிலையில் நோர்வே இலங்கையின் எண்ணெய் வளத்தைக் குறிவைக்க முயற்சிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எண்ணெய் வளத்தினை இலக்கு வைத்தே நோர்வே அரசாங்கம் இலங்கையின் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



ஊடகசவியலாளர்களுக்கு காப்புறுதிhத் திட்டம்


ஊடகவியலளர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த காப்புறுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் சேனக்க அபேகுணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்;படி அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார காப்புறுதியை ஒத்த காப்புறுதி திட்டமொன்றை ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுட் காப்புறுதி மற்றும் சுகாதார காப்புறுதி என்பன இதன்கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மருத்துவ ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு இந்த காப்புறுதி திட்டம் ஒரு காப்பீடாக அமையும் என தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தங்களின் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்கு ஒரு மில்லியன் ரூபா உயிரிழப்பு தொகையாகவும், நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களுக்கு வருடாந்தம் ஒன்றரை இலட்சம் ரூபாவும்; சத்திர சிகிச்கைகளுக்கு மூன்றரை இலட்ச ரூபா தொகையும் இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் சேனக்க அபேகுணசேகர தெரிவித்துள்ளார்.



சாரதி அனுமதிப் பத்திரத்தினை ரத்துச் செய்யும் அதிகாரம் போக்குவரத்து சாரா பொலிஸாருக்கும் வழங்கப்படவுள்ளது.



சாரதி அனுமதிப் பத்திரத்தினை ரத்துச் செய்யும் அதிகாரம் போக்குவரத்துப் பிரிவு சாரா பொலிஸாருக்கும் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக ;கட்டுப்படு;த்தும் பொருட்டே சாதாரண பொலிஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த புதிய சட்டத்திற்கான நகல் வரைவுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாதசாரி ஒழுங்குகள் மற்றும் வீதி ஒழுங்குகள் மீறப்படுவதனாலேயே இலங்கையில் பெரும்பாலான விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

விபத்துக்களால் சிகிச்சை பெற்று வருபர்களின் எண்ணிக்கை வாராந்தம் 200 ற்கும் 300 ற்கும் இடைப்பட்டுக் காணப்படுவதாக  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் விபத்துச் சம்பவங்களால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 47; ஆகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவின் அதிகாரியான பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாகன மற்றும் வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் சாரதிகள் வாகன ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

கையடக்க தொலைபேசிக் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை


தொலைபேசிக் கட்டணங்களை குறைக்குமாறு தொலைபேசிச் சேவை வழங்குனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில’ கையடக்க தெலைபேசிக் கட்டணங்களைக் குறைக்குமாறு தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு சேவை வழங்குனர்களிடம் கேட்டுக் கொண்டது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து கையடக்க தொலைபேசிக் கட்டணங்களைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தும் இதுவரை கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் கையடக்க தொலைபேசிச் சேவை வழங்குனர்களுக்கும் இடையில் சந்திப்பொன்றினை விரைவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.


.

இணைய சேவை வழங்கனர்களுக்கு எதிராக சட்ட சஷநடவடிக்கை


உள்ளூரில் இணைய சேவையினை வழங்குபவர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகிவதாக தொலைத் தொடர்புகள்  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணைய சேவை வழங்குநர்களால் விளம்பரப்படுத்தப்படும் இணைய வேகத்தினை அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை என அந்த ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

தங்களது விளம்பரங்களுக்கு ஏற்ப இணைய வேகத்தினை அதிகரிக்காத சேவை வழங்குனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்புகள்  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

இணைய வேகத்தினை மதிப்பிடும் நடவடிக்கைகள் தொலைத்தொடர்பு ஆணைக் குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இணைய வேகம் தொடர்பில் சேவை வழங்குனர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதம் தொடர்பில் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு விளம்பரம் ஒன்றினைத் தயாரித்து வருவதாகவும் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 6 லட்சம் இணைய பாவனையாளர்கள் காணப்படுகின்ற அதேவேளை கடந்த ஆண்டில் இணைய பாவனையாகளின் எண்ணிக்கை 2  லட்சத்திற்கும் 3 லட்சத்திற்கும் இடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கே.பி க்கு கொழும்பில் சொகுசு வீடு



நாட்டைப் பாதுகாப்பத்ற்காக இரத்தம் சிந்திய தான் சிறைச்சாலையில் மின்விசிறி ஒன்றினைப் பெறுவதற்கும் நீதிமன்ற உத்தரவு பெற வேண்டியுள்ளதாக கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக உயர் நீத்தவர்கள் மற்றும் இரத்தம் சிந்தியவர்களை இந்த அரசாங்கம் மதிப்பதில்லை எனவும் தேசத்துரோகிகளுக்கே அரசாங்கம் அடைக்களம் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடற்கூற்று சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு நேற்று அழைத்து வரப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கே.பி எனப்படும் குமரன் பத்மநாபனை அரசாங்கம் கொழும்பில் சொகுசு வீடொன்றில் வைத்து தாலாட்டி வருவதாக முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேக்கா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ{க்கான இலங்கைத் தூதுவர் க பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு


பிரான்ஸ{க்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் மலிந்த செனவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

தூதுவர் தயான் ஜயதிலக நாட்டில் பிரிவினை வாதத்தை தூண்டும் சக்திகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தயான் ஜயதிலகவின் துரோகத்தனத்தை ஏற்றுக் கொள்வதற்கு நாடு தயாராக இல்லை எனவும் அவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் கையயெழுத்து வேட்டை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தயான் ஜயதிலக இடதுசாரி சிந்தனையாளராக இருந்த போதிலும் பின்னர் ஒரு பேரினவாத சிந்தனை சார்ந்தே தன்னை மாற்றிக் கொண்டு செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் சமூக அக்கறை அற்றவர்கள் - சாடுகிறார் யாழ். முதல்வர்.


புலம்பெயர் தமிழர்களுக்கு தமது சமூக அக்கறை கிடையாது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் பல்வேறுபட்ட கலாசார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன.

இளவயதுக் கருக்கலைப்பு பாரியளவில் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கலாசர சீர்கேடுகளுக்கு புலம் பெயர் தமிழர்களின் வீடுகளே பயன்படுத்தப்படுகின்றன.

யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விடுதிகள் புலம்பெயர் தமிழர்களுக்கு சொந்தமானவை,

அவர்களுக்கு பணம் மாத்திரமே தேவையாக உள்ளது. எனவே தமது வீடுகளை விடுதிகளாகப் பயன்படுத்துவற்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிகிறது எனக் கண்ணீர் வடிக்கும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் சமூகம் மீது அக்கறையுடையவர்களா எனத் தெரியவில்லை எனவும் யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

Saturday, August 20, 2011

பலமான எதிர்கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி அழைப்பு


இலங்கையில் பலமான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பலமான எதிர்க்கட்சியினால் மாத்திரமே நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வாழ்க்கை சரிதப் புத்தக வெளியீட்டு வைபவம் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் போராடி வருவதாகஇதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சி ஆகியவை கீழ்தரமான அரசியல் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய மொழிக் கொள்கை துஷபிரயோகம் தொடர்பில் முறையிட புதிய தொலைபேசி இலக்கம



தேசிய மொழிக் கொள்கை துஷபிரயோகம் தொடர்பில் மக்கள் நேரடியாக தம்மிடம் முறையிட முடியும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மொழிக் கொள்கை துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

0112 871 378 என்ற இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய மொழிக் கொள்கையினை துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை அரச வங்கிகளில் தமிழ் மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படாமை தொடர்பானதாகும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அரச கருமங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மாத்திரம் வழங்கப்படுவதாக அரச  ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.