முல்லைத்தீவு மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு உள்ளுராட்சி சபைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவிருந்த இரு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்த 6 அரசாங்க ஊழியர்கள் மத்தியிலேயே புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
குறித்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்றுக்கொண்ட சம்பளமற்ற விடுமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த வேட்பாளர்கள் தமது தொழிலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்து பிரச்சினை தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக குறித்த வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment