நிபுணர்க்குழு அறிக்கையினை ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களிடம் சமர்ப்பிப்பது குறித்து அந்த சபை ஆலோசித்து வருவதாக ஐ. நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு ஆலேசானை வழங்கும் நோக்கில் தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய குழு இந்த அறிக்கையை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கை ஐ.நா செயலாளர் மட்டத்தில் மாத்திரம் தங்கி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையினை அதன் கிளை நிறுவனங்கள் மற்றும் ஏனைய சபைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஐஇநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐ. நாவின் செயலாளர் நாயகம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையை பர்ஹான் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment