நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவனை கற்றல் கற்பித்தல் நவடிக்கைகக்காக நாளை திறக்கப்படவுள்ளன.
நாட்டிலுள்ள தமிழ் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளுக்கு கடந்த 4 ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஜூலை 29 ஆம் திகதியும் இரண்டாம் தவனைக்காக விடுமுறை வழங்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நாளைய தினம் ஆரம்பமாகும் மூன்றாம் தவணை டிசம்பர் 9 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்காக மீண்டும் மூடப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment