போகம்பரை சிறைக் கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலைக் கைதிகளின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பொருட்டே நடவடிக்கையாக இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வேலைத் திட்டம் தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment