புதிதாக அமையப்பெற்ற அரசாங்கத்தின் அமைச்சரவை 93 ஆக நிர்ணயிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளார்.
19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் பிரகாரம் தேசிய அரசாங்கம் அமையுமிடத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 48 ஐ விஞ்சக் கூடாது. அத்துடன் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்கள் 45 ஐ மிகைக்கக் கூடாது.
இந்த ஏற்பாட்டின் பிரகாரம் 93 அமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கக் கோரி நாடாளுமன்ற செயலாளரிடம் பிரதமர் அனுமதி கோரியுள்ளார்.
நாளைய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.
புதிய அமைச்சரவை நாளை மறுநாள் அமையவுள்ளது.