நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற சபை முதல்வவராக லக்ஷ்மன் கிரியெல்லவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
புதிய சபாநாயகருக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இன்றைய அமர்வில் சில உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என எமது செய்தியாளர் குறிப்படுகிறார்.
No comments:
Post a Comment