Monday, August 31, 2015

இ.தி.ப.கழகத்தின் அறிவித்தல்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சமூகவியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சைக்காக block 2 பாடநூலை மாத்திரம் படித்து பரிட்சைக்கு தயாராகும் படி மாணவர்கள் அறிவுறுத்த படுகின்றனர்.
எதிர்வரும் 12 ஆம் திகதி மேற்படி பரிட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான அநுமதி அட்டைகள் மாணவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானதுறைத் தலைவர்  கலாநிதி செபாலிகா வெலிகல தெரிவித்துள்ளார்.

தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு

வணிக முயற்சியாளர்களுக்கான தொழில்சார் வணிக அபிவிருத்தி செயலமர்வு ஒன்று பேருவலையில் நடைபெறவுள்ளது.
பேருவலை ஜாமியா நழீமிய்யா கலாபீடத்தில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.
செப்டம்பர் 4,5&6 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் ஆர்வமுள்ள தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றலாம்.
மேலதிக விபரங்களுக்கு அழையங்கள் 0772992225 & 0770223311

புதிய ரக கொகா கோலா அறிமுகம்

வாயுக்கலவை அற்ற கொக்கா கோலா பானம் அடுத்த வருடத்திலிருந்து இலங்கை சந்தைக்கு வரவுள்ளது.
இந்த ஆண்டு முடிவடைவதற்குள் அதன் அனைத்து உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரை அகற்ற அந்த நிறுவனம் இணங்கியுள்ளது.