பல்கலைக் கழக மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதன் பின்னர் அவற்றை மாணவர்களிடம் கையளிக்க உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக உப வேந்தர்கள் குறித்த நடவடிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
விடைத்தாள்களை திருத்தும் போது, சில விரிவுரையாளர்கள் உரிய வகையில் திருத்தும் பணிகளை மேற்கொள்வதில்லை என மாணவர்கள் மேற்கொண்ட முறைபாட்டினை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment