கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகளை அம்பலப்பத்த சர்வதேச மன்னிப்புச்சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை இனங்காண்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதி அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை அம்பலப்படுத்தவுள்ளதாக எச்சரித்துள்ளது.
ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சர்ச்சை நிலவி வருவதாகவும் அந்த சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
No comments:
Post a Comment