ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள பலஸ்தீனத்தினைத் தனிநாடாக அங்கீகரிப்பதற்கான பிரேரணைக்கு இலங்கை ஆதரவளிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகளின்;, இம்மாதம் நடைபெறவுள்ள பொதுச் சபைக் கூட்டத்தில் பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பலஸ்தீனத்தை சுயாதீன நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பலஸ்தீன பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர்.
சுமர் 193 நாடுகளில் 124 நாடுகள் ஏற்கனவே தமது கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் இன்னும்; ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பே தேவைப்படுவதாகவும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ; அன்வர் அல் அகா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் கடயைமாற்றிவரும் தமது நாட்டு தூதுவர்கள் ஆதரவு திரட்டும் முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment